Wednesday, March 27, 2024

TNPSC TAMIL IMPORTANT TOPIC - REPEATED QUESTION

 

நால்வகை புலவர்கள்

·        கவிபாடும் திறமைக்கு ஏற்ப புலவர்களை நான்கு வகையாக பிரிப்பர். அவை,

·        ஆசுகவி

·        மதுரகவி

·        சித்திரக்கவி

·        வித்தாரக்கவி

 

1 minute video - Tamil

https://youtube.com/shorts/rYgdBV8rSxQ



சித்திரக்கவி       - பாரதியார்


திரைக்கவி        - மருதகாசி


விருத்தக்கவி     - கம்பர்



களாக்கவி         - ஒட்டக்கூத்தர்

கௌடக்கவி     - பரிதிமாற்கலைஞர்


ஆசுக்கவி          - காளமேகப்புலவர்


மதுரகவி           - பாஸ்கரதாஸ்

சந்தக்கவி          - அருணகிரிநாதர்

வித்தாரக்கவி     - திருமழிசை யாழ்வார்

திவ்யகவி          - பிள்ளை பெருமாள் ஐயங்கார்

 

ஆசுகவி என்றால் என்ன

·        பொருளடி, பாவணி முதலியன தந்து, மற்றொருவன் பாடுக என்ற உடனே பாடுவோன் ஆசுகவி ஆவான்.

மதுரகவி என்றால் என்ன

·        பொருட்செல்வம், சொற் செல்வம், தொடை விகற்பம் செறிய, உருவகம் முதலிய அலங்காரத்தோடு இனிய ஓசையுடன் அமுதமுறப் பாடுவோன் மதுரகவி ஆவான்.

சித்திரக்கவி என்றால் என்ன

·        மாலைமாற்று, சுழிகுளம், நாகபந்தம், சக்கரம், எழுகூற்றிருக்கை முதலிய மிளிர கவி பாடுவோன் சித்திரகவி.

வித்தாரக்கவி என்றால் என்ன

·        மாலை, யமகம், கலம்பகம், தசாங்கம், புராணம் முதலியன விரித்துப் பாடுவோன் வித்தாரகவி.

பனுவர் என்றால் யார்

·        ஆசுகவி, மதுரக்கவி, வித்தாரக்கவி, சித்திரக்கவி ஆகிய கவிகளைப் பாடுவோர் பனுவர் எனப்பட்டனர்.

·        சித்திரகவியை ‘ஓவியப்பாஎன்றும் கூறுவர்.

·        சித்திரகவி என்பது தமிழில் காணப்படும் இலக்கிய வகைமைகளுள் ஒன்று.

சித்திரக்கவியின் தோற்றுவாய்

·        சித்திரக்கவியின் தோற்றுவாய் எனப்படுவது = தொல்காப்பியம் குறிப்பிடும்வண்ணங்கள்ஆகும்.

·        ஓவியப் பாங்குடன் அமைந்த சித்திரக்கவி நூல் = திருமங்கையாழ்வாரால் பாடப்பட்டதிருவெழுகூற்றிருக்கை’.

·        திருமங்கையாழ்வாரை பின்பற்றி சித்திரக்கவி பாடியவர் = அருணகிரிநாதர்

·        சித்திரக்கவி படைத்த மற்றொருவர் = பாம்பன் சுவாமிகள்

நாகபந்தம் என்றால் என்ன

·        ஓவியப்பாவின் வகைகளுள்நாகபந்தம்என்பதும் ஒன்று.

·        நாகப்பிணை என இதனைத் தனித்தமிழ்ச் சொற்களால் குறிப்பிடலாம்.

·        இரண்டு, நான்கு, எட்டு என நாகப்பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருப்பது போலப் படம் வரையப்படும்.

·        பாடல் ஒன்றின் எழுத்துகள் நாகங்களின் தலையிலிருந்து வால் வரையில் உள்ள கட்டங்களில் எழுதப்பட்டிருக்கும்.

·        எந்த நாகத்தின் தலையிலிருந்து படித்தாலும் அதே பாடல் வரும்படி பாடலின் அமைப்பு இருக்கும்.

·        இவ்வாறு அமைக்கும்போது, கவிதையின் மொத்த எழுத்துகளும் சித்திரத்திற்குள் சுருங்கித்தோன்றும்.

·        சொல்வளம் மிக்கவர் பாடுவது = நாகபந்தம்.

 

இரட்டை நாகபந்தம் என்றால் என்ன

·        இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்புணர்ந்து விளையாடுவன போலச் சித்திரம் வரைந்து, அப்பாம்பின் உருவங்களில் கணக்கிட்ட அறைகள் வகுத்துச் சந்திகளில் நின்ற அறைகளில் பொதுவான எழுத்துகளமையப் பாடப்படுவது, இரட்டை நாகபந்தம் ஆகும்.

·        இரட்டை நாகபந்தத்தில் பாம்பின் தலைப்பகுதியிலிருந்து தொடங்கி வால் பகுதி வரைசென்று பொருள்காண வேண்டும்.

 

TNPSC TAMIL IMPORTANT TOPIC - REPEATED QUESTION

  நால்வகை புலவர்கள் ·         கவிபாடும் திறமைக்கு ஏற்ப புலவர்களை நான்கு வகையாக பிரிப்பர் . அவை , ·         ஆசுகவி ·         மது...