Saturday, June 28, 2025

2025 Group 4 - பொதுத்தமிழ் (General Tamil Model - 3)

 

🔥 TNPSC Tamil Model Exam - 1           🔥 TNPSC Tamil Model Exam - 2

 


Click for Answers

பொதுத்தமிழ் (General Tamil Model - 3)

 

1. இலக்கணக் குறிப்பு தருக மூதூர்

A) பண்புத்தொகை

B) வினைத்தொகை

C) வேற்றுமை தொகை

D) உரிச்சொல் தொடர்

 

2. இலக்கணக் குறிப்பு : தடக்கை

A) பண்புத்தொகை

B) வினைத்தொகை

C) உரிச்சொல் தொடர்

D) மூன்றாம் வேற்றுமை தொகை

 

3. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். -என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி

A) உவமை அணி

B) எடுத்துக்காட்டு உவமை அணி

C) உருவக அணி

D) வேற்றுமை அணி

  

4. சிவப்புச் சட்டை பேசினார் என்பதற்கான தொகையின் வகை

A) பண்புத்தொகை

B) உம்மைத்தொகை

C) வினைத்தொகை

D) அன்மொழித்தொகை

 

5. பண்புத்தொகையில் பொருந்தாத ஒன்றைக் காண்க.

A) செங்காந்தள்

B) வட்டத்தொட்டி

C) இன்மொழி

D) மலர்க்கை

 

6. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்

A) ஆறு

B) ஒன்பது

C) நான்கு

D) பத்து

 

7. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்ச சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது

A) செய்யுளிசை அளபெடை

B) சொல்லிசை அளபெடை

C) இன்னிசை அளபெடை

D) ஒற்றளபெடை

 

8. 'பொறுத்தார் பூமியாள்வார்' என்பதன் இலக்கணக் குறிப்பு

A) முதனிலை தொழிற்பெயர்

B) வினையாலனையும் பெயர்

C) வினைத்தொகை

D) முதனிலை திரிந்த தொழிற்பெயர்

 

9. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

A) எந்+தமிழ்+நா

B) எந்த + தமிழ் +நா

C) எம்+தமிழ்+நா

D) எந்தம் +தமிழ்+நா

 

10. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. - என்ற குறளில் இடம்பெற்றுள்ள அளபெடை

A) செய்யுளிசை அளபெடை

B) சொல்லிசை அளபெடை

C) இன்னிசை அளபெடை

D) ஒற்றளபெடை

 

11. தொழிற்பெயர்களில் தவறான ஒன்றைக் காண்க.

A) உரைத்தல்

B) கண்டவன்

C) இருத்தல்

D) எழுதல்

 

12. பொழிந்த என்பதன் சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக.

A) பொழி + த் + த்(ந் +

B) பொழி + ந் +த் +

C) பொழி + த் + த் +

D) பொழி +த்(ந் + த் +

 

13. இலக்கணக் குறிப்பு தருக. குரூஉக்கன்

A) செய்யுளிசை அளபெடை

B) இன்னிசை அளபெடை

C) சொல்லிசை அளபெடை

D) ஒற்றளபெடை

 

14. 'வேலோடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு' - இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள அணி யாது?

A) உவமையணி

B) எடுத்துக்காட்டு உவமை அணி

C) பிறிதுமொழிதல் அணி

D) உருவக அணி

 

15. 'கேள்வியினான்' இலக்கணக்குறிப்பு தருக.

A) பண்புத்தொகை

B) வினையாலணையும் பெயர்

C) வியங்கோள் வினைமுற்று

D) அன்மொழித்தொகை

 

16. 'தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது' என்ன வினா

A) அறிவினா

B) கொளல் வினா

C) ஏவல் வினா

D) கொடை வினா

 

17. பொருள்கோள் எத்தனை வகைப்படும்

A) 2

B) 4

C) 6

D) 8

 

18. 'அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார்' என்று வினா வகையை கூறும் நூல்

A) நன்னூல்

B) ஐங்குறுநூறு

C) பரிபாடல்

D) பதிற்றுபத்து

 

19. செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளும் முறைஆகும்.

A) ஆற்றுநீர்ப் பொருள்கோள்

B) நிரல்நிறைப் பொருள்கோள்

C) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

D) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

 

20. அருந்துணை என்பதை பிரித்தால் கிடைப்பது

A) அருமை + துணை

B) அரு + துணை

C) அருமை + இணை

D) அரு + இணை

  

21. பொருத்துக. (தொழில்கள்)

a) குறிஞ்சி - 1. நிரை கவர்தல்

b) முல்லை - 2. உப்பு விளைத்தல்

c) மருதம் - 3. களை பறித்தல்

d) நெய்தல் - 4. நிரை மேய்த்தல்

e) பாலை - 5. தேனெடுத்தல்

Options:

A) 5, 4, 2, 1, 3

B) 5, 3, 4, 1, 2

C) 5, 4, 3, 2, 1

D) 4, 2, 3, 1, 5

 

22. நெய்தல் நிலத்திற்குரிய சிறுபொழுது

A) யாமம்

B) மாலை

C) வைகறை

D) எற்பாடு

 

23. ஏற்பாடு என்பதனை பிரித்து எழுதுக.

A) எற்+பாடு

B) எற்ப + ஆடு

C) எல் + பாடு

D) என் + பாடு

 

24. தவறாகப் பொருந்திய ஒன்றைக் காண்க.

A) கார்காலம் - ஆவணி, புரட்டாசி

B) இளவேனிற் காலம் - சித்திரை, வைகாசி

C) முன்பனிக் காலம் - மாசி, பங்குனி

D) முதுவேனிற் காலம் - ஆனி, ஆடி

 

25. இலக்கணக் குறிப்புத் தருக 'ஆடுக'

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) வியங்கோள் வினைமுற்று

D) அடுக்குத்தொடர்

  

26. 'குரவம்' என்பது எந்த நிலத்திற்குரிய பூ ஆகும்.

A) குறிஞ்சி

B) மருதம்

C) பாலை

D) முல்லை

 

27. சரியாக பொருந்திய ஒன்றைக் காண்க. (நீர்)

A) குறிஞ்சி - காட்டாறு

B) முல்லை - சுனைநீர்

C) மருதம் - உவர்க்கழி

D) நெய்தல் - மணற்கிணறு

 

28. தண்பெயல்' என்பதன் பொருள்

A) வானம்

B) சிறப்பு

C) குளிர்ந்த மழை

D) முறை

 

29. பொருத்துக.

a) திணைவழுமைதி - 1) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்

b) பால் வழுவமைதி - 2) வாடா கண்ணா

c) மரபு வழுவமைதி - 3) என் அம்மை வந்தாள்

d) கால வழுவமைதி - 4) குயில் கத்தும்

Options:

A) 4, 1, 2, 3

B) 4, 3, 1, 2

C) 3, 2, 4, 1

D) 4, 2, 1, 3

 

30. செந்தீ என்பதன் இலக்கணக் குறிப்பு

A) அடுக்குத்தொடர்

B) வினைத்தொகை

C) பண்புத்தொகை

D) உரிச்சொற்றொடர்

  

31. வாரா (ஒன்றன்) - இலக்கணக் குறிப்பு தருக

A) அடுக்குத் தொடர்

B) பண்புத் தொகை

C) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

D) வினைத் தொகை

 

32. கூற்று 1: இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்கூற்று 2: இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்

A) கூற்று 1 மற்றும் 2 சரி

B) கூற்று 1 மற்றும் 2 தவறு

C) கூற்று 1 சரி கூற்று 2 தவறு

D) கூற்று 1 தவறு கூற்று 2 சரி

 

33. கூற்று 1: உயர்திணை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலர்பால் என நான்கு பிரிவுகளை உடையது.

கூற்று 2: அஃறிணை பலவின்பால் என்ற ஒரு பிரிவை உடையது

A) கூற்று 1 மற்றும் 2 சரி

B) கூற்று 1 மற்றும் 2 தவறு

C) கூற்று 1 சரி கூற்று 2 தவறு

D) கூற்று 1 தவறு கூற்று 2 சரி

 

34. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல' - இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள அணி யாது?

A) எடுத்துக்காட்டு உவமை அணி

B) பிறிதுமொழிதல் அணி

C) உவமையணி

D) வஞ்சப்புகழ்ச்சி அணி

  

35. பொருத்துக.

a) ஆநிரைக் கவர்தல்

- 1. வெட்சித் திணை

b) ஆநிரைகளை மீட்டல்

- 2. நொச்சித் திணை

c) மண்ணாசை காரணமாக பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி போருக்கு செல்லுதல்

- 3. வஞ்சித் திணை

d) கோட்டையை காத்தல் வேண்டி உள்ளிருந்தே முற்றுகையிடுதல்

- 4. கரந்தை

Options:

A) 1, 2, 3, 4

B) 3, 2, 1, 4

C) 4, 3, 2, 1

D) 1, 4, 3, 2

 

36. மயங்கிய என்பதை பகுபத உறுப்பிலக்கணப்படி பிரித்தெழுதுக.

A) மயங்கு + ன் +

B) மயம் + இன் +

C) மயங்கு + (ன்) + ய் +

D) மயங்கி + இன் +

 

37. பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது

A) பாடாண் திணை

B) பொதுவியல் திணை

C) பெருந்திணை

D) கைக்கிளை

 

38. இட்லிப்பூ என்று அழைக்கப்படும் 'பூ'

A) வெட்சிப் பூ

B) காஞ்சிப் பூ

C) தும்பை பூ

D) வாகை பூ

 

 39. புறத்திணைகள் எத்தனை வகைப்படும்

A) ஐந்து

B) ஒன்பது

C) பன்னிரெண்டு

D) பதினொன்று

 

40. பொருந்தாத ஒன்றைக் காண்க. (வினைத்தொகை)

A) மெய்முறை

B) காய்மணி

C) உய்முறை

D) செய்முறை

 

41. இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது

A) தீவக அணி

B) தற்குறிப்பேற்ற அணி

C) நிரல்நிறை அணி

D) தன்மை அணி

 

42. பொருத்துக.

a) நேர் நிரை - 1. புளிமா

b) நிரை நிரை - 2. தேமா

c) நிரை நேர் - 3. கூவிளம்

d) நேர் நேர் - 4. கருவிளம்

Options:

A) 4, 3, 2, 1

B) 3, 2, 1, 4

C) 3, 4, 1, 2

D) 1, 2, 3, 4

 

43. கூற்று 1: இருவர் உரையாடுவது போன்ற ஓசை - அகவலோசைகூற்று 2: ஒருவர் பேசுதல் போன்ற சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை -செப்பலோசை

A) கூற்று 1 மற்றும் 2 சரி

B) கூற்று 1 மற்றும் 2 தவறு

C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

D) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

 

 

44. அறியேன் - அறி + ய் + + ஏன் இவற்றில் 'ஏன்' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

A) எதிர்மறை இடைநிலை

B) தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

C) வினையெச்ச விகுதி

D) இறந்தகால இடைநிலை

 

45. ஆசிரியப்பா பற்றி கூற்றுகளில் சரியானது

1.    அகவல் ஓசை பெற்று வரும்

2.    இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும்

3.    ஈரசைசீர் மிகுதியாகவும் காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்

4.    ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு

A) 1, 2, 3

B) 2, 3, 4

C) 1, 3, 4

D) 1, 2, 4

 

46. பொருத்துக.

a) நிரை நேர் நேர் - 1. புளிமாங்காய்

b) நிரை நிரை நேர் - 2. கருவிளங்காய்

c) நேர் நிரை நிரை - 3. கூவிளங்கனி

d) நிரை நேர் நிரை - 4. புளிமாங்கனி

Options:

A) 1, 2, 3, 4

B) 4, 3, 2, 1

C) 3, 2, 4, 1

D) 1, 4, 2, 3

 

47. உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் - என்ற குறளில் 'பலகற்றும்' என்பதற்கான அசை மற்றும் வாய்ப்பாடு

A) நிரை நேர், புளிமா

B) நேர் நேர்.தேமா

C) நிரை நேர் நேர், புளிமாங்காய்

D) நேர், நாள்

 

 48. கூற்று 1: வேலிகளில் ஏறிப்படரும் நீண்ட கொடியே உழிஞைக் கொடி. இதனை முடக்கத்தான் என அழைக்கிறோம்.

கூற்று 2: எல்லா இடங்களிலும் வளரக்கூடிய தூய வெண்ணிற மலர்களைக் கொண்ட சிறிய செடி தும்பை ஆகும்.

A) கூற்று 1, 2 சரி

B) கூற்று 1 சரி, 2 தவறு

C) கூற்று 1, 2 தவறு

D) கூற்று 1 தவறு, 2 சரி

 

49. கூற்று 1: வெட்சி முதல் பாடாண்வரை உள்ள புறத் திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணை

கூற்று 2: கைக்கிளை என்பது பொருந்தாக் காமம்

A) கூற்று 1, 2 சரி

B) கூற்று 1 சரி, 2 தவறு

C) கூற்று 1 தவறு, 2 சரி

D) கூற்று 1, 2 தவறு

 

50. கீழ்க்கண்டவற்றில் மருத நிலத்திற்குரிய பூ

A) காஞ்சி

B) நொச்சி

C) இட்லிப்பூ

D) தும்பை

 

51. "கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்"-இவ்வடியில் எவ்வகை வழுவமைதி வந்துள்ளது?

A) திணை வழுவமைதி

B) கால வழுவமைதி

C) பால்வழுவமைதி

D) மரபு வழுவமைதி

 

52. "வளர் வானம்" இலக்கணக் குறிப்பறிக.

A) எண்ணும்மை

B) உம்மைத் தொகை

C) முற்றும்மை

D) வினைத்தொகை

 

 

53. "இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்"

A) வழாநிலை

B) திணை வழுவமைதி

C) இட வழுவமைதி.

D) பால் வழுவமைதி

 

54. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்.

1.    தொகா நிலைத் தொடர் ஒன்பது வகைப்படும்.

2.    ஒன்றிற்கு மேற்பட்ட வினையெச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது கூட்டுநிலைப் பெயரெச்சம்.

A) 1, 2 சரி

B) 1 மட்டும் தவறு

C) 2 மட்டும் தவறு

D) 1,2 தவறு

 

55. "பண்என்னாம் பாடற்கியை பின்றேல்; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்" - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?

A) உவமையணி

B) எடுத்துக்காட்டு உவமையணி

C) இல்பொருள் உவமையணி

D) பிறிதுமொழிதல் அணி

 

56. “வேலொடு நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவுஇக்குறளில் இடம்பெற்ற அணி யாது?

A) வேற்றுமை அணி

B) உவமை அணி

C) உருவக அணி

D) எடுத்துக்காட்டு அணி

 

57. வருக என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் என்ன?

A) (வரு) +

B) வா(வரு) +

C) (வாரு) +

D) வரு +

  

58. குரூஉக்கண் இலக்கணக்குறிப்பு என்ன?

A) சொல்லிசை அளபெடை

B) ஒற்றளபெடை

C) இன்னிசை அளபெடை

D) இசைநிறை அளபெடை

 

59. "நச்சப் படாதவன் செல்வம் நடு ஊருள் நச்சமரம் பழுத் தற்று" இவற்றில் வந்துள்ள அணி யாது?

A) உவமை அணி

B) இரட்டுறமொழிதல் அணி

C) எடுத்துக்காட்டு உவமை அணி

D) தற்குறிப்பு ஏற்ற அணி

 

60. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்பது வழுவமைதி ஆகும்.

A) கால வழுவமைதி

B) மரபு வழுவமைதி

C) இட வழுவமைதி

D) திணை வழுவமைதி

 

61. அஃறிணை பிரிவுகளை உடையது.

A) 4

B) 3

C) 5

D) 2

 

62. இடம் எத்தனை வகைப்படும் (இலக்கணத்தில்)

A) 2

B) 4

C) 5

D) 3

 

63. இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது ஆகும்.

A) வழுவமைதி

B) வழாநிலை

C) வழு

D) தொகாநிலை

 

64. பொருத்துக.

a) அறிவினா - 1. ஐயம் நீங்கி தெளிவுபெற வினவுவது

b) அறியாவினா - 2. ஒரு பொருளை வாங்கி கொள்ளும் பொருட்டு விளைவது

c) ஐய வினா - 3. அறியாத ஒன்றை அறியும் பொருட்டு வினவுவது

d) கொளல் வினா - 4. அறிந்த ஒன்றை அறியும் பொருட்டு வினவுவது

Options:

A) 1, 2, 3, 4

B) 4, 3, 2, 1

C) 4, 3, 1, 2

D) 2, 1, 4, 3

 

65. 1. வினா ஆறுவகைப்படும்2. விடை ஏழு வகைப்படும் சரியான கூற்று?

A) 1 மட்டும்

B) 2 மட்டும்

C) 1,2 சரி

D) எதுவுமில்லை

 

66. வெளிப்படை விடைகளில் பொருந்தாதது

A) கூட்டுவிடை

B) மறைவிடை

C) நேர்விடை

D) ஏவல்விடை

 

67. குறிப்பு விடைகள் எத்தனை?


A) 6

B) 5

C) 4

D) 3


 

68. பொருத்துக.

a) சுட்டுவிடை - 1. சுட்டிக் கூறும் விடை

b) மறைவிடை - 2. மறுத்துக் கூறும் விடை

c) நேர் விடை - 3. உடன்பட்டுக்கூறும் விடை

d) ஏவல் விடை - 4. மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை

Options:

A) 1, 2, 3, 4

B) 4, 3, 2, 1

C) 2, 1, 4, 3

D) 3, 4, 1, 2

 

69. வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறல்?

A) இனமொழிவிடை

B) வினாஎதிர்வினாதல் விடை

C) உற்றது உரைத்தல் விடை

D) உறுபது கூறல் விடை

 

70. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது - இக்குறளில் இடம்பெற்றுள்ள பொருள்கோளை கூறு?

A) ஆற்றுநீர் பொருள்கோள்

B) முறை நிரல்நிறை பொருள்கோள்

C) எதிர் நிரல்நிறை பொருள்கோள்

D) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

 

71. அருணா ஓடினாள் என்பதன் விளித்தொடர் தேர்வுசெய்?

A) ஓடிய அருணா

B) ஓடி வந்தாள்

C) அருணா ஓடாதே!

D) அருணாவிற்காக ஒடினாள்

 

72. குறிஞ்சித் திணைக்குரிய சிறுபொழுது?

A) மாலை

B) யாமம்

C) வைகறை

D) எற்பாடு

 

73. பொருத்துக.

a. கார்காலம் - 1. ஆவணி, புரட்டாசி

b. குளிர்காலம் - 2. ஐப்பசி, கார்த்திகை

c. முன்பனிக்காலம் - 3. மார்கழி தை

d. பின்பனிக்காலம் - 4. மாசி,பங்குனி

Options:

A) 1, 2, 3, 4

B) 4, 3, 2, 1

C) 3, 4, 1, 2

D) 2, 1, 4, 3

 

 74. சரியாக பொருந்தாதது?

A) குறிஞ்சி - சிறுகுடி

B) முல்லை - மூதூர்

C) மருதம் - பேரூர்

D) பாலை - குறும்பு

 

75. தவறானதை தேர்ந்தெடு?

A) கைமுறை - வேற்றுமைத்தொகை

B) பயில்தொழில் - வினைத்தொகை

C) கொள்க - வியங்கோள் வினைமுற்று

D) மெய்முறை - வேற்றுமைத் தொகை

 

76. 'மெய்முறை -என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

A) வினைத்தொகை

B) வினைமுற்று

C) உம்மைத்தொகை

D) வேற்றுமைத் தொகை

 

77. 'கொன்றைசூடு -இலக்கணக் குறிப்பு

A) தொழிற்பெயர்

B) இரண்டாம் வேற்றுமைத் தொகை

C) உம்மைத்தொகை

D) உவமைத்தொகை

 

78. தோண்டும் அளவிற்கு ஏற்ப மணற்கேணியில் நீர் ஊறும் -விடைக்கேற்ற சரியான வினா அமைக்க

A) மணற்கேணியில் தோண்டும் அளவு யாது?

B) மணற்கேணியில் நீர் ஊற காரணம் யாது?

C) எதன் அளவிற்கேற்ப மணற்கேணியில் நீர் ஊறுகிறது.

D) மணற்கேணியில் எவ்வாறு நீர் உயரும்.

 

79. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. 'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்'

A) கணவனை இழந்தோர் யார்?

B) கணவனை இழந்தோர்க்கு என்ன நேர்கிறது?

C) யாருக்கு ஆறுதல் கூற இயலாது?

D) இல் என்பதன் பொருள் யாது?

 

80. 'உய்முறை' என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

A) வினையெச்சம்

B) வினைத்தொகை

C) உரிச்சொல்

D) ஏவல் பன்மை வினைமுற்று

 

81. அரிய மலர் - இலக்கண குறிப்பு தருக.

A) வினைத்தொகை

B) வினையெச்சம்

C) பெயரெச்சம்

D) பண்புத்தொகை

 

82. "முத்தொள்ளாயிரம் வெண்பாவால் எழுதப்பட்ட நூல்"விடைக்கேற்ற வினா அமைக்க?

A) முத்தொள்ளாயிரம் எவ்வாறு எழுதப்பட்டது.

B) முத்தொள்ளாயிரம் எவ்வகை பாவால் எழுதப்பட்டது.

C) முத்தொள்ளாயிரம் இயற்ற காரணம் யாது?

D) முத்தொள்ளாயிரம் சிறப்பாக அமைய காரணம் யாது?

 

83. 'வண்ணமும் சுண்ணமும் என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

A) உம்மைத்தொகை

B) எண்ணும்மை

C) உவமைத்தொகை

D) அடுக்குத்தொடர்

 

84. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே

A) வள்ளுவனைப் பெற்றது யார்?

B) வையகம் யாரைப் பெற்றது?

C) வையகம் புகழ் பெற்றது எதனால்?

D) வையகம் பெற்ற புகழ் எது?

 

85. புன்புலம்' -என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

A) பண்புத்தொகை

B) பண்புப்பெயர்

C) உம்மைத்தொகை

D) வினைத்தொகை

 

86. பழமொழியில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க. மாடு இளைத்தாலும் இளைக்காது.

A) கொம்பு

B) கன்று

C) வயிறு

D) வால்

 

87. உழவுத் தொழில் வாழ்க -இது எவ்வகை தொடர் எனக் கண்டறிக.

A) வினாத்தொடர்

B) உணர்ச்சித் தொடர்

C) விழைவுத் தொடர்

D) செய்தித் தொடர்

 

88. குணமாலை நன்றாக வளர்ந்தாள் - இவ்வாக்கியத்தை பிறவினை வாக்கியமாக மாற்றுக.

A) குணமாலை நன்றாக வளர்ந்துகொண்டிருந்தாள்

B) குணமாலை நன்றாக வளர்த்தாள்

C) நன்றாக வளர்ந்தாள் குணமாலை

D) குணமாலை நன்றாக வளரப்பட்டாள்

 

89. செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர் செயற்கரிய செய்கலா தார் - இக்குறட்பாவில் மோனை அல்லாதது எது?

A) செயற்கரிய செயற்கரிய

B) செயற்கரிய செய்வார்

C) செயற்கரிய செய்கலாதார்

D) பெரியார் சிறியர்

 

90. நன்றி மறப்பது நல்லதன்று என்ற எதிர்மறை வாக்கியத்தை உடன்பாட்டு வாக்கியமாக மாற்றுக.

A) நன்றி மறப்பது நல்லதல்ல

B) நன்றி மறப்பது நல்லது

C) நன்றி மறப்பது தீதாகும்

D) நன்றி மறப்பது தீதல்ல

 

 91. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் -இக்குறட்பாவில் வந்துள்ள எதுகை யாது?


A) கூழை எதுகை

B) முற்றெதுகை

C) மேற்கதுவாய் எதுகை

D) கீழ்க்கதுவாய் எதுகை


 

92. மனிதனால் எல்லாம் முடியும் எதிர்மறை வாக்கியமாக மாற்றுக.

A) மனிதனால் எல்லாம் முடியாது

B) மனிதனால் எல்லாம் முடியும் என்றில்லை

C) மனிதனால் முடியாதது ஒன்றுமில்லை

D) மனிதனால் எல்லாம் முடியுமோ

 

93. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர் மாற்றாரை மாற்றும் படை -இக்குறட்பாவில் வரும் இயைபு எது?

A) ஆற்றுவார் ஆற்றல்

B) ஆற்றுவார் -மாற்றாரை

C) ஆற்றுவார் - அது சான்றோர்

D) மாற்றாரை - மாற்றும்

 

94. அப்துல் நேற்று வந்தான் - பிறவினைத் தொடரைந் தேர்ந்தெடு.

A) அப்துல் இன்று வந்தான்

B) அப்துல் இன்று வருவான்

C) அப்துல் நேற்று வருவித்தான்

D) அப்துல் இன்று வருவித்தான்

 

95. இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது எவ்வகை அணி?

A) உருவக அணி

B) ஏகதேச உருவக அணி

C) இல்பொருள் உவமையணி

D) எடுத்துக்காட்டு உவமையணி

 

96. வைகறையில் துயில் எழுதல் வேண்டும் இதற்கான கட்டளை வாக்கியத்தை தேர்ந்தெடு.

A) வைகறையில் துயில் எழாதே

B) வைகறையில் துயில் எழ வேண்டும்

C) வைகறையில் துயில் எழு

D) வைகறையில் துயில் எழுந்துவிடு

 

97. குமரன் தேவாரம் ஒதுவித்தான் இஃது எவ்வகைத் தொடர்? தேர்க.

A) தன்வினை

B) செய்வினை

C) பிறவினை

D) செயப்பாட்டுவினை

 

98. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி நேரே பொருள் கொள்வது எவ்வகை அணி?

A) பிறிது மொழிதல் அணி

B) தற்குறிப்பேற்ற அணி

C) நவிற்சி அணி

D) நிரல் நிறை அணி

 

99. இது எவ்வகை வாக்கியம் என எழுதுக. சீவக சிந்தாமணி திருத்தக்கதேவரால் இயற்றப்பட்டது.

A) உடன்பாட்டு வினை

B) செய்வினை

C) செயப்பாட்டு வினை

D) கட்டளை வாக்கியம்

 

100. கலக்கம் என்ற பொருள் விளக்கும் பொருத்தமான உவமை யாது?

A) கடலில் கரைத்த பெருங்காயம் போல்

B) கண்ணை காக்கும் இமை போல்

C) சூரியனைக் கண்ட பனி போல்

D) கடன் பட்டான் நெஞ்சம் போல்


No comments:

Post a Comment

பொதுத்தமிழ் (General Tamil Model - 4)

1. கீழ்க்கண்டவற்றில் கூற்றுகளைக் காண்க . 1.     உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டு...