NHA 2022-23 படி, இந்தியாவில் நடப்பு சுகாதார செலவினங்களில் (CHE) கிட்டத்தட்ட 50% பொதுமக்களின் சொந்த செலவினங்களாக (OOPE) உள்ளன.
அரசு சுகாதார செலவினம் GDP-யில் 1.48% ஆக அதிகரித்தாலும், WHO பரிந்துரையான 5%-ஐ விடவும், தேசிய குறிக்கோளான 2.5%-ஐ விடவும் குறைவாகவே உள்ளது.
தனியார் மருத்துவமனைகளின் பங்கு 30.83% ஆக அதிகமாக இருக்க, மாநில அரசுகள் மொத்த அரசு சுகாதார செலவினத்தில் 63%க்கும் மேல் பங்களிக்கின்றன.
நான்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் வி. மோகனாவை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நீதிபதிகளின் குழு பரிந்துரை செய்தது.
ஒப்புதல் அளிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நியமிக்கப்படும் முதல் பெண் நீதிபதியாக வி. மோகனா இருப்பார்; கடைசியாக 2021 ஆகஸ்டில் பெண் நீதிபதி நியமிக்கப்பட்டார்.
CJI உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 32-லிருந்து 38 ஆக அதிகரிக்கப்பட்டதை அடுத்து இப் பரிந்துரைகள் வந்தன.
2026 பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், இந்தியா தனது முதல் பிரிக்ஸ் சுற்றுலா பணிக்குழு (TWG) கூட்டத்திற்கு காணோளி வாயிலாக தலைமை தாங்கியது.
இந்தியாவின் சுற்றுலா நிகழ்ச்சி நிரலின் கருத்துரு "Building for Resilience, Innovation, Cooperation and Sustainability" – AI பயன்பாடு, நிலையான சுற்றுலா ஆகியவை முன்னுரிமை.
இரண்டாவது TWG கூட்டம் மற்றும் பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டம் 2026 ஆகஸ்டில் ஜெய்ப்பூரில் நடைபெறும்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பட்டியலிடப்பட்ட சாதியினரின் (SC) நலத்திட்ட அமலாக்கத்திற்காக PM-AJAY இணையதளம் மற்றும் AJAY அலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியது.
PM-AJAY என்பது 'பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா' – காகித அடிப்படையிலான வேலைகளை முழுமையான டிஜிட்டல் பணிப்பாய்வாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.
AJAY செயலி கிராம அளவில் திட்டமிடல், கள கண்காணிப்பு, புவிக் குறியிடுதல், புகைப்படம் பதிவேற்றுதல் மற்றும் டாஷ்போர்டு அறிக்கைகளுக்கு துணைபுரியும்.
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம் 2025-ன் கீழ், NSB விதிகள் மற்றும் NST விதிகள், 2026 ஆகியவற்றை மத்திய அரசு அறிவித்தது.
தேசிய விளையாட்டு வாரியம் (NSB) தேசிய விளையாட்டு அமைப்புகளின் அங்கீகாரம் மற்றும் நிர்வாகத்திற்கான உச்ச ஒழுங்குமுறை அமைப்பாக செயல்படும்.
விளையாட்டு தகராறுகளுக்கு தேசிய விளையாட்டுத் தீர்ப்பாயம் (NST) விரைவான தீர்வளிக்கும்; உத்தரவுகளுக்கு எதிராக 30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
கூகுள் இந்தியாவில் "Google AI Educator Series (GES)" எனும் இலவச AI பயிற்சி திட்டத்தை பள்ளி மற்றும் உயர்கல்வி ஆசிரியர்களுக்கு அறிவித்தது – லண்டன் கல்வி உலக மன்றம் 2026-ல் தொடங்கப்பட்டது.
மகாராஷ்டிரா, அசாம், சத்தீஸ்கர், லடாக், பஞ்சாப் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு Gemini போன்ற AI கருவிகளை பொறுப்புடன் பயன்படுத்துவதில் பயிற்சி அளிக்கும்.
ஆரம்பத்தில் அசாமி, இந்தி, மராத்தி, தெலுங்கு, ஒடியா மற்றும் பஞ்சாபி ஆகிய 6 இந்திய மொழிகளில் கிடைக்கும்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் அசாதாரண இடம்பெயர்வால் ஏற்படும் மக்கள்தொகை மாற்றங்களை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) உயர்மட்டக் குழு அமைத்தது.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. பிரகாஷ் பிரபாகர் நவ்லேகர் தலைமையில் இக்குழு எல்லைப் பாதுகாப்பு, பழங்குடியினர் மீதான தாக்கம் ஆகியவற்றை ஆராயும்.
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டம் 2025-ன் கீழ் முறையான ஆவணங்கள் இல்லாத குடியேற்றவாசிகளை அடையாளம் காணுதல் மற்றும் நாடுகடத்துதல் நடவடிக்கைகளை இது பரிந்துரைக்கும்.
புதுடில்லியில் குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய முன்னெடுப்புகள் அறிவிக்கப்பட்டன.
குவாட் (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா) – 'இந்தோ-பசிபிக் கடல்சார் விழிப்புணர்வு' (IPMDA) விரிவுபடுத்தல், 'எதிர்காலத் துறைமுகங்கள்' முன்னெடுப்பு, 'இந்தோ-பசிபிக் எரிசக்தி பாதுகாப்பு' புதிய திட்டம்.
முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய வகை தனிமங்களில் ஒத்துழைக்க இந்தியா – அமெரிக்கா 'முக்கிய கனிமங்கள் கட்டமைப்பு' ஒப்பந்தத்தில் கைகெழுத்திட்டன.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) Q-SAFE (Quantum Secure and Future-ready Financial Ecosystem) எனும் 8 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.
குவாண்டம் தொழில்நுட்பத்தால் இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் மறைகுறியிடல் அமைப்புகளுக்கு ஏற்படும் அபாயங்களை ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்.
சென்னை IIT பேராசிரியர் அனில் பிரபாகர் தலைமையில் DST, SBI, NPCI உறுப்பினர்கள் உள்ள இக்குழு குவாண்டம்-பாதுகாப்பான மறைகுறியாக்கத்தை பரிந்துரைக்கும்.
2026 ஜனவரி–ஏப்ரல் காலத்தில் UK-ஐ பின்னுக்குத் தள்ளி இந்தியா இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக உருவெடுத்தது; அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி 8.9% அதிகரித்து 364.15 மில்லியன் USD ஆனது; 2026 ஏப்ரல் மொத்த ஏற்றுமதி 1.38 பில்லியன் USD – 6% வளர்ச்சி.
ICT மற்றும் BPM சேவை ஏற்றுமதிகள் 146.09 மில்லியன் USD; தேங்காய் சார்ந்த தயாரிப்புகள் வலுவான வளர்ச்சி; ஆடை, ஜவுளியில் சரிவு.
இந்தியா 191 வகையான கரப்பான் பூச்சி இனங்களை பதிவு செய்துள்ளது; இவற்றில் 60%க்கும் அதிகமானவை இந்தியாவில் மட்டுமே வாழக்கூடிய உள்நாட்டு இனங்கள்.
'ஜூடாக்சா' இதழில் வெளியான ZSI ஆய்வு கரப்பான் பூச்சிகளுக்கான இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய DNA பட்டைக்குறியீட்டு நூலகத்தை உருவாக்கியுள்ளது; 100+ உயர்தர DNA குறியீடுகள் தயாரிக்கப்பட்டன.
2026 மார்ச்சில் புனேவுக்கு அருகிலுள்ள தக்காண பீடபூமியில் 'நியோலோபோப்டெரா பெனின்சுலாரிஸ்' என்ற புதிய உள்நாட்டு இனம் கண்டறியப்பட்டது.
No comments:
Post a Comment