Sunday, June 29, 2025

பொதுத்தமிழ் (General Tamil Model - 4)


1. கீழ்க்கண்டவற்றில் கூற்றுகளைக் காண்க.
1.    உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
2.    உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
A) 1, 2 சரி
B) 1 மட்டும் சரி
C) 2 மட்டும் சரி
D) 1, 2 தவறு
 
2. கீழ்க்கண்டவற்றுள் தவறானதைத் தேர்க.
A) உவமைத் தொகையில் வல்லினம் மிகும்
B) தனிக்குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின்பின் வல்லினம் மிகும்
C) மிக என்னும் சொல்லின் பின் வல்லினம் மிகும்
D) பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்
 
3. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1.    முதலெழுத்துகளாகிய உயிரையும் மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.
2.    நுட்பமான ஒலிப்பு முறையை உடையது அஃகேனம்.
A) 1, 2 சரி
B) 1 மட்டும் சரி
C) 2 மட்டும் சரி
D) 1, 2 தவறு
 
4. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
A) இன் உயிர்
B) இனிய உயிர்
C) இன்னுயிர்
D) இனிமைஉயிர்
 
5. கதலிகைக் கொடியும் காழ்ஊன்று விலோதமும் - இவ்வடியில் இடம்பெற்றுள்ள கொடிகளின் வரிசை முறையே
A) கொம்புகளில் கட்டும்கொடி, துணியிலான கொடி, பல கொடிகள் கட்டியது
B) துணியிலான கொடி, பல கொடிகள் கட்டியது, கொம்புகளில் கட்டும் கொடி
C) கொம்புகளில் கட்டும் கொடி, பல கொடிகள் கட்டியது, துணியிலான கொடி
D) பல கொடிகள் கட்டியது, கொம்புகளில் கட்டும்கொடி, துணியிலான கொடி

6. பொருத்துக.
| பறவைகள்            ஒலி மரபு |
| a. ஆந்தை             1. கரையும் |
| b. காகம்               2. அலறும் |
| c. புறா                  3. குழறும் |
| d. கூகை                4. குனுகும் |
A) a-2, b-1, c-4, d-3
B) a-1, b-2, c-3, d-4
C) a-3, b-2, c-4, d-1
D) a-2, b-1, c-3, d-4
 
7. தாழ்பூந்துறை இலக்கணக் குறிப்பறிக.
A) இரண்டாம் வேற்றுமைத் தொகை
B) பண்புத்தொகை
C) மூன்றாம் வேற்றுமைத் தொகை
D) வினைத்தொகை
 
8. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1.    பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.
2.    பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் இடுகுறிப்பெயர் காரணப்பெயர் என இருவகைப்படுத்தினர்.
3.    ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாக குறிப்பது இடுகுறிச் சிறப்புப் பெயர் எனப்படும்.
A) அனைத்தும் சரி
B) 1 மட்டும் தவறு
C) 2 மட்டும் தவறு
D) 3 மட்டும் தவறு
 
9. பொருத்துக.
| a) உறுபொருள்               1. ஏவல் வினைமுற்று |
| b) தண்மணல்                 2. உரிச்சொல் தொடர் |
| c) தோமறு கோட்டியும்   3. பண்புத்தொகை |
| d) பரப்பு மின்                 4. எண்ணும்மை |
A) a-2, b-4, c-1, d-3
B) a-2, b-1, c-4, d-3
C) a-2, b-4, c-3, d-1
D) a-2, b-3, c-4, d-1
 
10. ஆறாம் வேற்றுமைத்தொகையை குறிப்பிடுக
A) மலைக்குகை
B) தலைவணங்கு
C) கம்பர் பாடல்
D) மலைவீழ் அருவி
 
11. 'கசடற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A) கச + டற
B) கசட + அற
C) கசடு + உற
D) கசடு + அற
 
12. பாய்வன - பகுபத உறுப்புகளைப் பிரித்தறிக
A) பாய் + வ் + அன
B) பாய் + ய் + வ் + அன் +
C) பாய் + வ் + அன் +
D) பா + ய் + வ் + அன்
 
13. கூற்று 1: நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவதைப் புணர்ச்சி என்கிறோம்.
கூற்று 2: விகாரப்புணர்ச்சி தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்
A) கூற்று 1, 2 சரி
B) கூற்று 1, 2 தவறு
C) கூற்று 1 தவறு, 2 சரி
D) கூற்று 1 சரி, 2 தவறு
 
14. "வையம் தகளியா வார்கடலே நெய்யாக..." எனத் தொடங்கும் நாலாயிரத்திவ்வியப்பிரபந்தப் பாடலில் பயின்றுவந்துள்ள அணி யாது?
A) ஏகதேச உருவக அணி
B) உவமையணி
C) இல்பொருள் உவமையணி
D) உருவக அணி
 
 
15. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க
1.    மிக என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகும்.
2.    என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும்.
A) 1, 2 சரி
B) 1 மட்டும் சரி
C) 2 மட்டும் சரி
D) 1, 2 தவறு
 
16. பொருத்துக.
| a) இயற்சொல்                1. பெற்றம் |
| b) திரிசொல்                   2. இரத்தம் |
| c) திசைச்சொல்               3. அழுவம் |
| d) வடசொல்                   4. சோறு |
A) a-2, b-1, c-3, d-4
B) a-3, b-2, c-1, d-4
C) a-4, b-2, c-1, d-3
D) a-4, b-3, c-1, d-2
 
17. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?
A) அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன் - கருவியாகுபெயர்
B) வானொலி கேட்டு மகிழ்ந்தனர் - காரியவாகு பெயர்
C) இரண்டு கிலோ கொடு - எடுத்தலளவை ஆகுபெயர்
D) முல்லையைத் தொடுத்தாள் - பொருளாகுபெயர்
 
18. பொருந்தாத இணையைத் தேர்க.
A) - மதகுநீர்
B) நோ - வறுமை
C) மை - அஞ்சனம்
D) தீ - புல்
 
19. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1.    பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப் பேறு ஆகும்.
2.    பெரும்பாலும் 'த்' மட்டுமே எழுத்துப்பேறாக வரும்.
3.    விகாரம் வரவேண்டிய இடத்தில் த் வந்தால் அது எழுத்துப்பேறு.
A) அனைத்தும் சரி
B) 1 மட்டும் தவறு
C) 2 மட்டும் தவறு
D) 3 மட்டும் தவறு
 
20. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1.    பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும்.
2.    இது கட்டளையாகவே அமையும்.
3.    பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும்.
A) அனைத்தும் சரி
B) 2 சரி 1, 3 தவறு
C) 1, 3 சரி 2 தவறு
D) 1, 2 சரி 3 தவறு
 
21. பொருத்துக.
| a) து, று                1. ஒன்றன்பால் வினைமுற்று விகுதி |
| b) என், ஏன்          2. தன்மை ஒருமை வினைமுற்று விகுதி |
| c) , உம்             3. வினையெச்ச விகுதிகள் |
| d) ,                4. பெயரெச்ச விகுதிகள் |
A) a-1, b-2, c-3, d-4
B) a-2, b-1, c-4, d-3
C) a-1, b-2, c-4, d-3
D) a-2, b-1, c-3, d-4
 
22. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1.    பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும்.
2.    பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்.
A) 1, 2 சரி
B) 1 மட்டும் சரி
C) 2 மட்டும் சரி
D) 1, 2 தவறு
 
23. 'பண்டிகை' என்பது எவ்வகைச் சொல்?
A) இயற்சொல்
B) திரிசொல்
C) திசைச்சொல்
D) வடசொல்
 
 
24. தவறான இணையைத் தேர்க.
A) மா - இடுகுறிப்பெயர்
B) கருவேலங்காடு - இடுகுறிச் சிறப்புப்பெயர்
C) அணி - இடுகுறிச் சிறப்புப்பெயர்
D) வளையல் - காரண சிறப்புப் பெயர்
 
25. மற்றொருவர்' என்னும் சொல்லில் எவ்வகைச் சொல் இடம்பெற்றுள்ளது?
A) பெயர்ச்சொல்
B) வினைச்சொல்
C) இடைச்சொல்
D) உரிச்சொல்
 
26. "உள்ளபொருள் உள்ளிருக்க புறத்தேயோர் பொருள்தேடி உழல்கின் றீரேஎன்பதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
A) கல்வி
B) தம்முடைய பொருள்
C) உறவினர்கள்
D) சுற்றத்தார்
 
27. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி
A) உவமை அணி
B) ஏகதேச உருவக அணி
C) இல்பொருள் உவமை அணி
D) பிறிதுமொழிதல் அணி
 
28. பொருத்துக.
| a. ஐந்தாம் வேற்றுமை     1. விளி |
| b. ஆறாம் வேற்றுமை     2. காலம் |
| c. ஏழாம் வேற்றுமை      3. கிழமை |
| d. எட்டாம் வேற்றுமை   4. ஒப்பு |
A) a-3, b-2, c-1, d-4
B) a-4, b-3, c-2, d-1
C) a-4, b-1, c-2, d-3
D) a-2, b-3, c-4, d-1
 
  
29. பொருந்தாததைத் தேர்க.
A) பொன்னேபோல் - உவம உருபு
B) மலர்க்கை - உருவகம்
C) வில்வாள் - உம்மைத்தொகை
D) வல்லார் - வினையாலணையும் பெயர்
 
30. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1.    ஒன்று என்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன.
2.    உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
3.    உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
A) அனைத்தும் சரி
B) 1 மட்டும் தவறு
C) 1, 2 தவறு
D) 2, 3 தவறு
 
31. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A) உவமை அணி
B) நிரல்நிறை அணி
C) இல்பொருள் உவமை அணி
D) பிறிது மொழிதல் அணி
 
32. பொருத்துக.
| a) வகுப்பறை சிரித்தது              1. பொருளாகு பெயர் |
| b) கார் அறுத்தான்                     2. இடவாகு பெயர் |
| c) முல்லையைத் தொடுத்தாள்   3. காலவாகு பெயர் |
| d) பைங்கூழ் வளர்ந்தது             4. காரியவாகு பெயர் |
A) a-2, b-1, c-3, d-4
B) a-2, b-3, c-1, d-4
C) a-4, b-1, c-3, d-2
D) a-4, b-3, c-1, d-2
 
 
 
 
33. வரிசைப்படுத்துக
A) கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
B) கடல்ஓடா நெடுந்தேர் கால்வல் கடல்ஓடும்
C) கடல்ஓடும் கால்வல் நெடுந்தேர் கடல் ஓடா
D) கடல்ஓடும் நெடுந்தேர் கால்வல் கடல்ஓடா
 
34. இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தருவது
A) வினைத்தொகை
B) பண்புத்தொகை
C) அன்மொழித்தொகை
D) வேற்றுமைத் தொகை
 
35. ஓம்புவார் = ஓம்பு + வ் + ஆர் இப்பகுபத உறுப்பிலக்கணத்தில் 'வ்' என்பது கீழ்க்கண்ட எதனைக் குறிக்கும்?
A) எதிர்கால இடைநிலை
B) சந்தி
C) சாரியை
D) விகாரம்
 
36. பொருத்துக:
| a) விளித் தொடர்                       1. புலவரே வருக |
| b) எழுவாய்த் தொடர்               2. கார்குழலி படித்தாள் |
| c) வினைமுற்றுத் தொடர்          3. வென்றான் சோழன் |
| d) பெயரெச்சத் தொடர்             4. எழுதிய பாடல் |
A) a-1, b-2, c-3, d-4
B) a-2, b-1, c-4, d-3
C) a-3, b-4, c-1, d-2
D) a-4, b-3, c-2, d-1
 
37. கீழ்கண்டவற்றில் ஏவல் வினைமுற்றுகள் பற்றி சரியானதை தேர்வு செய்க?
1.    முன்னிலையில் வரும்
2.    ஒருமை பன்மை வேறுபாடு இல்லை
3.    கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும்
4.    விகுதி பெற்று பெறாமலும் வரும்
A) 1, 3, 2 சரி
B) 2, 3, 4 சரி
C) 1, 3, 4
D) 1, 2, 4
 
38. தளையுடன் பொருந்திய வாய்ப்பாட்டைத் தேர்க.
A) கலித்தளை - காய்முன் நேர்
B) வெண்சீர் வெண்டளை - கனி முன் நேர்
C) கனி முன் நிரை - ஒன்றா வஞ்சித்தளை
D) விளம் முன் நிரை - நிரையொன்றாசிரியத்தளை
 
39. பொருத்துக.
| எழுத்துகள்                     பிறக்குமிடம் |
| a. ஆய்த எழுத்து             1. மூக்கு |
| b. வல்லின எழுத்து         2. மார்பு |
| c. மெல்லின எழுத்து      3. கழுத்து |
| d. இடையின எழுத்து     4. தலை |
A) a-4, b-2, c-1, d-3
B) a-1, b-2, c-3, d-4
C) a-4, b-3, c-2, d-1
D) a-3, b-2, c-4, d-1
 
40. ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் _____ ஆகும்.
A) வினாத்தொடர்
B) செய்தித்தொடர்
C) விழைவுத்தொடர்
D) உணர்ச்சித்தொடர்
 
41. பொருத்துக.
| a) கலை + அழகு            1. உயிர் முதல் |
| b) மண் + குடம்              2. மெய்ம் முதல் |
| c) வாழை + இலை         3. மெய்யீறு |
| d) வாழை + மரம்           4. உயிரீறு |
A) a-1, b-2, c-3, d-4
B) a-1, b-3, c-2, d-4
C) a-4, b-1, c-2, d-3
D) a-4, b-3, c-1, d-2
 
 
42. கூற்று 1: ஓரெழுத்து ஒருமொழிகள் யகரவரிசை -யா
கூற்று 2: ஓரெழுத்து ஒருமொழியில் குறில் எழுத்து -நொ து ஆகும்
A) கூற்று 1 சரி
B) கூற்று 2 சரி
C) கூற்று 1, 2 சரி
D) கூற்று 1, 2 தவறு
 
43. பொருத்துக.
| a) பெயர்ப்பகுபதம் | 1. வாழ்ந்தான் |
| b) வினைப் பகுபதம் | 2. மன் |
| c) இடைப் பகுபதம் | 3. நனி |
| d) உரிப் பகாப்பதம் | 4. பெரியார் |
A) a-1, b-2, c-3, d-4
B) a-2, b-3, c-1, d-4
C) a-3, b-4, c-1, d-2
D) a-4, b-1, c-2, d-3
 
44. கீழக்கண்ட கூற்றுகளைக் காண்க.
1.    நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும்.
2.    ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்.
3.    நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது.
A) 1, 2 சரி 3 தவறு
B) 1, 3 சரி 2 தவறு
C) 2, 3 சரி 1 தவறு
D) அனைத்தும் சரி
 
45. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் என்பது எவ்வகை வாக்கியம்?
A) வினாத்தொடர்
B) விழைவுத்தொடர்
C) செய்தித்தொடர்
D) உணர்ச்சித்தொடர்
 
 
46. பொருத்துக.
| a) ஓட்டம் | 1. முதனிலைத் தொழிற்பெயர் |
| b) அடி | 2. முதனிலை திரிந்த தொழிற்பெயர் |
| c) சூடு | 3. விகுதி பெற்ற தொழிற்பெயர் |
A) a-1, b-2, c-3
B) a-3, b-2, c-1
C) a-2, b-3, c-1
D) a-3, b-1, c-2
 
47. தவறான இலக்கணக் குறிப்பு இணையைத் தேர்க?
A) நன்மொழி - பண்புத்தொகை
B) உறுதுயர் - வினையெச்சம்
C) கைதொழுது - மூன்றாம் வேற்றுமைத்தொகை
D) கேட்டபாடல் - பெயரெச்சம்
 
48. கீழ்க்காண் கூற்றுகளை ஆராய்க.
1.    "வ்" என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
2.    சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.
A) 1, 2 சரி
B) 1 மட்டும் சரி
C) 2 மட்டும் சரி
D) 1, 2 தவறு
 
49. உயிர்மெய் பற்றி தவறான கருத்து
A) மெய் எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
B) உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.
C) இதன் வரிவடிவம் உயிர் எழுத்தையும் மற்றும் அதன் ஒலிக்கும் கால அளவு மெய்யெழுத்தையும் ஒத்திருக்கும்.
D) முதல் எழுத்துக்களைச் சார்ந்து வருவதால் அவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.
 
 
50. பொருத்துக.
| a. படித்த பள்ளி               1. இறந்தகால பெயரெச்சம் |
| b. பாடுகின்ற பாடல்       2. பெயரெச்சம் |
| c. பாடும் பாடல்             3. நிகழ்காலப் பெயரெச்சம் |
| d. பாடிய பாடல்             4. எதிர்கால பெயரெச்சம் |
A) a-1, b-2, c-3, d-4
B) a-2, b-3, c-4, d-1
C) a-2, b-3, c-1, d-4
D) a-3, b-2, c-4, d-1
 
51. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1.    சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும்.
2.    முதலெழுத்துக்கள் முப்பது ஆகும்.
3.    குற்றியலுகரம் தனக்குப் பின் உள்ள எழுத்தைக் கொண்டு ஆறு வகையாகப் பிரிக்கப்படும்.
4.    தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
A) அனைத்தும் சரி
B) 1, 2 சரி 3, 4 தவறு
C) 2 மட்டும் தவறு
D) 3 மட்டும் தவறு
 
52. கீழ்க்கண்டவற்றுள் வல்லினம் மிகா இடத்தைக் கண்டறிக
A) ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின்
B) தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின்பின்
C) உம்மைத் தொகையில்
D) உவமைத் தொகையில்
 
53. கீழ்க்கண்டவற்றுள் குற்றியலுகரம் அல்லாதது எது?
A) காசு
B) பயறு
C) விடு
D) சால்பு
 
 
54. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்.
1.    தொகா நிலைத் தொடர் ஒன்பது வகைப்படும்.
2.    ஒன்றிற்கு மேற்பட்ட வினையெச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது கூட்டுநிலைப் பெயரெச்சம்.
A) 1, 2 சரி
B) 1 மட்டும் தவறு
C) 2 மட்டும் தவறு
D) 1, 2 தவறு
 
55. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?
A) மஞ்சள்
B) வந்தால்
C) கல்வி
D) தம்பி
 
56. செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது?
A) செய்யுளிசையளபெடை
B) சொல்லிசையளபெடை
C) இன்னிசையளபெடை
D) ஒற்றளபெடை
 
57. கீழ்க்கண்டவற்றுள் மூன்று வகை போலிகளுள் அல்லாதது எது?
A) மஞ்சு
B) இலஞ்சி
C) நிலன்
D) அஞ்சு
 
58. கூற்று 1: ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்
கூற்று 2: வினையைக் கொண்டு முடியும் எச்சம் குறிப்பு வினையெச்சம் எனப்படும்
A) கூற்று 1, 2 சரி
B) கூற்று 1, 2 தவறு
C) கூற்று 1 தவறு, 2 சரி
D) கூற்று 1 சரி, 2 தவறு
 
  
59. தொழிற்பெயர் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
A) தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும்.
B) காலம் காட்டாது.
C) படர்க்கைக்கு மட்டும் உரியது.
D) மேற்கண்ட எதுவுமில்லை.
 
60. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1.    பகுபத உறுப்புகளால் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும்.
2.    பகாப்பதம் அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும்.
3.    பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உண்டு.
A) அனைத்தும் சரி
B) 1 மட்டும் தவறு
C) 2 மட்டும் தவறு
D) 3 மட்டும் தவறு
 
61. இலக்கணக் குறிப்பு தருக 'மலர்விழி'
A) பண்புத்தொகை
B) உம்மைத்தொகை
C) உவமைத்தொகை
D) அன்மொழித்தொகை
 
62. பொருத்துக.
| a. ஒற்றளபெடை                      1. வணங்ங்கினான்
| b. செய்யுளிசை                         2. உறாஅர்க்கு
| c. இன்னிசை அளபெடை         3. கெடுப்பதூஉம்
| d. சொல்லிசை அளபெடை       4. நரஇய
A) a-4, b-1, c-2, d-3
B) a-3, b-4, c-1, d-2
C) a-2, b-4, c-3, d-1
D) a-1, b-2, c-3, d-4
 
63. _____ ஆகிய இரண்டு உயிர் எழுத்துக்கள் வாய்திறந்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன.
A) ,
B) ,
C) ,
D) ,
 
64. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1.    திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இருவகைப்படுத்தலாம்.
2.    "இதழ்" என்பது ஒரு பொருள் குறித்த பல திரிசொல் ஆகும்.
3.    அன்ன, மான என்பன இடைதிரிசொல் ஆகும்.
A) அனைத்தும் சரி
B) 2 மட்டும் தவறு
C) 2, 3 மட்டும் தவறு
D) 3 மட்டும் தவறு
 
65. முல்லைத்திணை தவறான கூற்றைக் கண்டறிக.
A) மரம் - கொன்றை, காயா, குருந்தம்
B) பெரும்பொழுது - கார்காலம்
C) உரிப்பொருள் - ஊடலும் ஊடல் நிமித்தமும்
D) நீர் - குறுஞ்சுனை நீர், காட்டாறு
 
66. கூற்று 1: பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.
கூற்று 2: எச்சம் இருவகைப்படும் பெயரெச்சம் வினையெச்சம் ஆகும்.
A) கூற்று 1 சரி
B) கூற்று 2 சரி
C) கூற்று 1, 2 சரி
D) கூற்று 1, 2 தவறு
 
67. முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது.
A) வினைமுற்றுத் தொடர்
B) வினையெச்சத் தொடர்
C) பெயரெச்சத்தொடர்
D) வேற்றுமைத் தொடர்
 
68. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1.    கூட்டுவினையின் முதல் வினை செய அல்லது செய்து என்னும் வினையெச்ச வடிவில் இருக்கும்.
2.    துணைவினை வினையடி வடிவில் இருக்கும்.
3.    துணைவினையே திணை, பால், இடம், காலம் காட்டும் விகுதிகளைப் பெறும்.
4.    தமிழில் ஏறத்தாழ 40 துணை வினைகள் உள்ளன.
A) அனைத்தும் சரி
B) 2, 4 தவறு
C) 2, 3 தவறு
D) 2, 3, 4 தவறு
 
69. பொருத்துக.
| a) குவிமொட்டு              1. உருவகம் |
| b) அஞ்சி                        2. வினையெச்சம் |
| c) இறைஞ்சி                    3. பெயரெச்சம் |
| d) வாழ்க்கைப்போர்        4. வினைத்தொகை |
A) a-1, b-2, c-3, d-4
B) a-2, b-1, c-4, d-3
C) a-4, b-3, c-2, d-1
D) a-1, b-3, c-2, d-4
 
70. "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்" -இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள்
A) ஆற்றுநீர்ப் பொருள்கோள்
B) நேர் நிரல் நிறைப் பொருள்கோள்
C) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
D) எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்
 
71. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1.    சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.
2.    உயிரெழுத்துகளில் நெடிலுக்கு குறிலும் குறிலுக்கு உயிர் எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும். அளபெடையில் மட்டும் நெடிலை தொடர்ந்து அதன் இனமான குறில் எழுத்து சேர்ந்து வரும்.
A) இரண்டும் சரி
B) 1 சரி 2 தவறு
C) 1 தவறு 2 சரி
D) இரண்டும் தவறு
 
72. தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது
A) அறிவினா
B) அறியா வினா
C) ஐயவினா
D) ஏவல்வினா
 
73. பொருத்துக.
| a. நடந்து                        1. முற்றெச்சம் |
| b. பேசிய                        2. குறிப்புப் பெயரெச்சம் |
| c. எடுத்தனன் உண்டான் 3. பெயரெச்சம் |
| d. பெரிய                        4. வினையெச்சம் |
A) a-3, b-2, c-1, d-4
B) a-4, b-3, c-1, d-2
C) a-4, b-1, c-2, d-3
D) a-2, b-3, c-4, d-1
 
74. கீழ்க்காணும் கூற்றுகள் குறிப்பிடும் ஐவகை நிலம் எது?
1.    உணவு: மீன் உப்புக்குப் பெற்ற பொருள்
2.    பறை: மீன் கோட்பறை
3.    பூ : தாழை, நெய்தல்
A) முல்லை
B) குறிஞ்சி
C) நெய்தல்
D) பாலை
 
75. உலகத்தோ - அலகிட்டு வாய்ப்பாடு காண்க.
A) நிரை நேர் நேர்
B) நேர் நேர் நிரை
C) நிரை நிரை நேர்
D) மேற்கண்ட எதுவுமில்லை
 
76. 'வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும் - என்ற வரிகளுடன் தொடர்புடையவர்?
A) அறிஞர் அண்ணா
B) மு.வரதராசனார்
C) மருதகாசி
D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
 
77. பொருத்துக.
| a. அன்புள்ள அம்மா | 1. பெரியவன் கவிராயர் |
| b. காவடிச்சிந்தின் தந்தை | 2. ஆர். பாலகிருஷ்ணன் |
| c. இந்தியாவின் பெப்பிசு | 3. சென்னிகுளம் அண்ணாமலையார் |
| d. திருமலை முருகன்பள்ளு | 4. ஆனந்தரங்கர் |
 
A) a-4, b-3, c-1, d-2
B) a-3, b-1, c-2, d-4
C) a-2, b-4, c-3, d-1
D) a-2, b-3, c-4, d-1
 
78. கீழ்க்கண்டவற்றுள் சரியான பிரித்தெழுதுதலைத் தேர்க.
1.    பெருங்கடல் - பெருமை + கடல்
2.    பூம்பாவாய் - பூ + பாவாய்
3.    எத்திசை - எத்து + திசை
4.    அருங்கானம் - அருங்கை + கானம்
A) 1, 2 சரி
B) 2, 3 சரி
C) 1, 4 சரி
D) 2, 4 சரி
 
79. அஃறிணை - பிரித்து எழுதுக.
A) அஃது + இணை
B) அஃறு + இணை
C) அஃகு + திணை
D) அல் + திணை
 
80. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
A) ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நால்நாழி - ஒளவையார்.
B) நெடு வெள்ளூசி நெடு வசி பரந்தவடு - பதிற்றுப்பத்து
C) கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி - கார்நாற்பது
D) அனைத்தும் சரி
 
81. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
A) கவை
B) சினை
C) போத்து
D) கழை
 
 
82. கீழ்க்காண்பவற்றுள் எதிர்மறை வினைமுற்றுகளில் ஒருமை, பன்மை பிழையற்ற தொடரைத் தேர்க.
A) அதைச் செய்தது நான் அல்லேன்
B) மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை
C) பானையை உடைத்தது கண்ணன் அல்ல
D) பகைவர் நீவீர் அல்லர்.
 
83. 'தென் திசைக்குமரி ஆடி வட திசைக்கு ஏகுவீர் ஆயின்' என்ற பாடல்வரிகளை இயற்றியவர் யார்?
A) கடுவெளிச்சித்தர்
B) அகத்தியர்
C) சத்திமுத்தப்புலவர்
D) திருமூலர்
 
84. சரியான மரபுப்பிழையற்ற வார்த்தையைத் தேர்ந்தெடுக.
A) கூகை கூவும்
B) சேவல் கொக்கரிக்கும்
C) கிளிகுழறும்
D) புறா குனுகும்
 
85. மரபுப்பிழையற்ற தொடரைச் காண்க.
A) அணில் பழம் சாப்பிட்டது
B) கொடியிலுள்ள மலரைக் கொய்து வா
C) தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தனர்.
D) கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டாள்
 
86. குட்டிச்சுவர் - மரபுத் தொடருக்கான பொருளறிக.
A) அலைந்து திரிதல்
B) இல்லாத ஒன்று
C) பட்டறிவில்லாத படிப்பறிவு
D) பலனின்றி இருத்தல்

 
87. எதிர்ச்சொல் பொருத்துக.
| a. வெப்பம் | 1. சிறுமை |
| b. வெறுத்தது | 2. குழப்பு |
| c. வியன் | 3. தண்மை |
| d. விளக்கு | 4. விரும்பியது |
A) a-3, b-1, c-4, d-2
B) a-3, b-4, c-1, d-2
C) a-2, b-4, c-1, d-3
D) a-1, b-2, c-3, d-4
 
88. அகர வரிசையில் எழுதுக.
வெகுளாமை, வேப்பிலை, வீடுபேறு, வாழ்க்கை, வையம்
A) வையம், வாழ்க்கை, வீடுபேறு, வெகுளாமை, வேப்பிலை
B) வாழ்க்கை, வீடுபேறு, வெகுளாமை, வேப்பிலை, வையம்
C) வீடுபேறு, வெகுளாமை, வையம், வேப்பிலை, வாழ்க்கை
D) வெகுளாமை, வீடுபேறு, வேப்பிலை, வையம், வாழ்க்கை
 
89. பொருத்துக. 'எழு - வேர்சொல்'
| a. வினைமுற்று | 1. எழுந்தவன் |
| b. வினையாலணையும் பெயர் | 2. எழுந்து |
| c. தொழிற்பெயர் | 3. எழுந்தான் |
| d. வினையெச்சம் | 4. எழுதல் |
A) a-3, b-1, c-4, d-2
B) a-3, b-4, c-1, d-2
C) a-2, b-4, c-1, d-3
D) a-1, b-2, c-3, d-4
 
90. 'பரப்பு' என்ற வேர்சொல்லின் ஏவல் வினைமுற்றைத் தேர்க.
A) பரப்பினோர்
B) பரப்புமின்
C) பரப்பினார்
D) பரவுதல்
 
91. தலைவனை குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
A) தீ
B) சோ
C)
D)
 
92. படி என்ற அடிச்சொல்லில் இருந்து வினையாலணையும் பெயரை உருவாக்குக.
A) படித்து
B) படித்தல்
C) படித்த
D) படித்தவர்
 
93. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்"
A) நன்றிக்கு வித்தாவது எது?
B) நல்லொழுக்கம் நன்மை தருமா?
C) நன்றி என்பது யாது?
D) நல்லொழுக்கம் என்றால் துன்பமா?
 
94. "பூனா ஒப்பந்தம் மூலம் இரட்டை வாக்குரிமையை மாற்றி அமைத்தனர்" விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடு
A) பூனா ஒப்பந்தம் எதற்காக மாற்றியமைக்கப்பட்டது.
B) எதற்காக பூனா ஒப்பந்தத்தை மாற்றியமைத்தனர்
C) எவ்வாறு பூனா ஒபந்தத்தை மாற்றியமைத்தனர்
D) எதன் மூலம் இரட்டை வாக்குரிமையை மாற்றி அமைத்தனர்.
 
95. "முத்துடைத்தாமம்"-இலக்கண குறிப்பு தருக.
A) ஏழாம் வேற்றுமைத்தொகை
B) ஆறாம் வேற்றுமைத்தொகை
C) ஐந்தாம் வேற்றுமைத்தொகை
D) இரண்டாம் வேற்றுமைத் தொகை
 
96. பொருத்துக.
| a. தெள்ளமுது | 1. உருவகம் |
| b. முத்திக்கனி | 2. வினைத்தொகை |
| c. தடவரை | 3. பண்புத்தொகை |
| d. ஆடுகிளை | 4. உரிச்சொல் தொடர் |
A) a-1, b-3, c-2, d-4
B) a-3, b-1, c-4, d-2
C) a-4, b-1, c-2, d-3
D) a-3, b-4, c-1, d-2
 
 
97. அறம் செயவிரும்பு - எவ்வகை தொடர் எனக் கண்டறிக.
A) செய்தித்தொடர்
B) உடன்பாட்டு வினைத்தொடர்
C) தன்வினைத் தொடர்
D) கட்டளைத் தொடர்
 
98. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - இக்குறட்பாவில் வந்துள்ள மோனை யாது?
A) மேற்கதுவாய் மோனை
B) கீழ்க்கதுவாய் மோனை
C) கூழை மோனை
D) முற்றுமோனை
 
99. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் - இதில் எவ்வகை வழுவமைதி வந்துள்ளது.
A) பால் வழுவமைதி
B) இட வழுவமைதி
C) மரபு வழுவமைதி
D) கால வழுவமைதி
 
100. பழமொழியில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க.
மண் குதிரையை நம்பி _____ _____
A) போருக்கு போகதே
B) பந்தயத்தில் இறங்காதே
C) செயலைச் செய்யாதே
D) ஆற்றில் இறங்காதே

No comments:

Post a Comment

பொதுத்தமிழ் (General Tamil Model - 4)

1. கீழ்க்கண்டவற்றில் கூற்றுகளைக் காண்க . 1.     உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டு...